December 6, 2025, 12:04 AM
26 C
Chennai

கார்கே பேச்சுக்கு சித்தராமையா விலை கொடுக்க வேண்டியிருக்கும்: மக்களவையில் மோடி எச்சரிக்கை!

புது தில்லி:
காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே பேசியதற்கு, கர்நாடக தேர்தலில் சித்தராமையா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் ஜனநாயகம் குறித்துப் பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை என்றும் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.

நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, நான் மல்லிகார்ஜுன கார்கே பேசியதை அமைதியாக கவனித்தேன். ஆனால், நான் பேசும் போது, எனது உரைக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இத்தகைய எதிர்ப்புக் குரல்களால் எனது குரலை ஒடுக்க முடியாது. கார்கே, யாரை திருப்திப்படுத்த முயன்றார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சுக்கு கர்நாடகத்தில் சித்தராமையா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். கர்நாடகத்தில் வரும் தேர்தலுக்குப் பின் கார்கே மக்களவையில் இருப்பாரா என்பது உறுதியாகத் தெரியாது.

காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் செய்ததற்கான பலனை தற்போது அறுவடை செய்து வருகிறது. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பது ஜனநாயகத்தின் உயிர்நாடி. எந்தக் காரணமும் இல்லாமல் காங்கிரஸ் என்னை விமர்சனம் செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா வளர்ச்சியைப் பெறவில்லை. ரேடியோவும், டிவியும் காங்கிரஸ் கட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. எதிர்ப்பை வெளிக்காட்ட காங்கிரஸ் ஆட்சியில் இடம் இருந்ததில்லை. நீதித்துறை உள்ளிட்ட அனைத்தும் காங்கிரசின் கட்டுப்பாட்டிலேயேதான் இருந்தன. பழங்காலத்தில் இருந்த ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் வழங்க்கவில்லை. ஜனநாயகம் பற்றி பேசும் நீங்கள், அது பற்றி எங்களுக்கு பாடம் நடத்த முயற்சி செய்கிறீர்களா?

ஊடகத்தின் முன் உங்கள் கட்சித் தலைவர் பேப்பரைக் கிழித்தெறிந்தார். உங்கள் கட்சித் தலைவர் மட்டும், இளம் தலைவர்களின் பேச்சைக் கேட்கவே மாட்டார். ஆனால் நீங்களோ ஜனநாயகம் குறித்து பேசி வருகிறீர்கள். இந்தியாவின் பாரம்பரிய வரலாறைத் திரும்பி பார்த்தால், ஜனநாயகத்திற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஜனநாயகம் என்பதே, நமது கலாசாரத்தில் ஓர் அங்கம்தானே.

சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மட்டும் கடுமையாகவும் உண்மையாகவும் மக்கள் நலனுக்காக உழைத்திருந்தால், இந்தியா இன்று இருக்கும் நிலையை விட பல மைல் தூரம் முன்னேற்றம் கண்டிருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தியது. அந்தக் குடும்பத்தின் புகழ் பாடுவதையே, காங்கிரசார் வேலையாக வைத்திருந்தனர். ஜனநாயகம் நமது ரத்தத்தில் உள்ளது. ஆனால், அதனை காங்கிரசும் நேருவும் கொண்டு வரவில்லை. ஜனநாயகம் தழைப்பதை காங்கிரஸ் தடுத்தது. ஜனநாயகம் குறித்து பேச காங்கிரசுக்கு அருகதையில்லை. வாரிசு அரசியல் கண்டவர்கள் ஜனநாயகம் குறித்து பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் குறித்து பாடம் நடத்தக்கூடாது என்று பதிலளித்தார் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories