பேஸ்புக்கில் ஃபேக் பெண் ஐடியில் வந்த பயங்கரவாதி! சிக்கிய விமானப் படை கேப்டன்!

பேஸ்புக்கில் போலி பெண் ஐடி.,யில் விமானப் படை கேப்டனிடம் அறிமுகமாகிப் பழகி, இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை பயங்கரவாதிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவ்வாறு பயங்கரவாதிகளிடம் ஆவணங்களைக் கொடுத்த கேப்டன் அருண் மார்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள இந்திய விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் தலைமை கேப்டனாக பணிபுரிபவர் அருண் மார்வா (51). இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இருந்து பெண்கள் இருவர் பேஸ்புக்கில் நட்பு அழைப்பு கொடுத்து இணைந்துள்ளனர். அவர்களுடன் மார்வா, தொடர்ந்து பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆபாசமாகப் பேசி சேட் செய்துள்ளனர். மார்வாவும் அவர்களுடன் பேஸ்புக் சேட், வாட்ஸ் அப் சேட் உள்ளிட்டவற்றில் பேசியுள்ளார். இதனிடையே அவர்கள் இந்த சேட்களை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்து விமானப் படை குறித்த ரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வியாழனன்று விமானப்படையின் ரகசிய கூட்ட அரங்கிற்கு கையில் ஸ்மார்ட் மொபைல் போனுடன் அருண் மார்வா வந்துள்ளார். ஆனால் கூட்டங்களுக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக போன்களைக் கொண்டு செல்ல தடை உள்ளது. இதனால் அவரிடம் இருந்து காவலர்கள் மொபைல் போனை பறித்துக் கொண்டனர். பின்னர் அவற்றை ஆய்வு செய்ததில், மார்வா செய்த தகவல் பரிமாற்றங்கள் தெரியவந்தன. இதனை அடுத்து, உயர் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அருண் மார்வாவை கைது செய்த போலீசார் ஐந்து நாட்கள் தனியாக வைத்து விசாரணை நடத்தினர். இது விமானப் படை அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிகாரிகள் செயல்படுவதற்கு கட்டுப்பாடுகள் பல இருந்த போதிலும், அருண் மார்வா போன்றவர்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ் இயக்க பயங்கரவாதிகள் இயங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories