ஐசிசி இயக்குனராகிறார் இந்திரா நூயி

Published:

துபாயில் நடைபெற்ற ஐசிசி தலைவர்கள் சந்திப்பில், இந்திய வம்சாவளியான இந்திரா நூயி ஐசிசியின் முதல் பெண் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்கள் சந்திப்பு துபாயில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்திய வம்சாவளியான இந்திரா நூயியை முதல் பெண் இயக்குனராக தேர்வு செய்துள்ளனர். இந்த அறிவிப்பை ஐசிசியின் தலைவர் சஷான்க் மனோகர் தெரிவித்துள்ளார்.

பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இந்திரா நூயி, உலக அளவில் முன்னணி தொழிலதிபாராக திகழ்ந்து வருகிறார். இதனால், கிரிக்கெட் விளையாட்டை உலக அளவில் பிரபலமடைய செய்ய ஐசிசி இந்திரா நூயிக்குப் இந்தப் பதவியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திரா நூயி வரும் ஜூன் 2018 இலிருந்து இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிந்த பின் ஐசிசி அந்தப் பதவிக்காலத்தை வேண்டுமென்றால் நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img