கட்சிப் பதவியில் இருந்து ராஜினாமா: சோனியாவிடம் கடிதம் கொடுக்கிறார் அஜய் மக்கான்

Published:

புதுதில்லி: தில்லி தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்ட அஜய் மக்கான், தேர்தலில் ஏற்படட் படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதற்கான ராஜினாமாக் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் தலைவர் சோனியாவை நேரில் சந்தித்துக் கொடுக்க உள்ளார் அஜய் மக்கான். தில்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை தொகையைப் பறிகொடுத்துள்ளனர். தில்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபைத் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இது ஒருபுறம் இருக்க அந்தக் கட்சியின் 70 வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறுகிற அளவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் ஓட்டுகளைப் பெற்றனர். 63 வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img