ஆந்திரம்… ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்! அழுதுவடிந்த என்டிஆர் சமாதி; ஆவேசத்தில் பேரன்கள்!

Published:

juniorNRT - 2026

பொறுமை இழந்த ஜூனியர் என்டிஆர் இனி தாத்தாவின் நிகழ்ச்சிகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறினார்.

என்டி ராமராவின் பேரன்கள் தாரக், கல்யாண்ராம் இருவரும் காலையில் எழுந்து அஞ்சலி செலுத்துவதற்காக என்டிஆர் காட் அருகில் சென்றபோது அங்கே ஒரு பூ கூட இல்லை. பூக்களின் அலங்காரத்தோடு அழகாக திகழ வேண்டிய என்டிஆர் சமாதி களையிழந்து காணப்பட்டது! இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட பேரன்கள் பொறுமை இழந்தனர்! ஏற்பாடுகள் சரிவர செய்யப் படாததைக் கண்டித்தனர்!

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த நந்தமூரி தாரக ராமாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சமாதி அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதைக் கண்டதும் அவருடைய ரசிகர்களும் குடும்பத்தாரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

பேரன்கள் தாரக் கல்யாண்ராம் இருவரும் தாத்தா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு செவ்வாய் அன்று விடிகாலை என்டிஆர் நினைவிடத்திற்குச் சென்றனர். அந்நேரம், சமாதியில் ஒரு மலர் கூட இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர்!

உடனே ஜூனியர் என்டிஆர் தன் ரசிகர்கள் மூலமும் பெரிய அளவில் ஏகத்துக்கும் மலர்களை வரவழைத்தார்! என்டிஆர் அபிமானிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமாதியை அலங்கரித்தனர்! பின் பேரன்கள் இருவரும் தாத்தாவின் சமாதியில் மலர்ச் செண்டுகள் வைத்து வணங்கினர்!

சற்று நேரம் அமைதியாக அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ஜெயந்தி ஏற்பாடுகள் சரிவர இல்லை என்று வருத்தம் அடைந்த ஜூனியர் என்டிஆர், இனி தாத்தாவின் ஜெயந்தி, நினைவு நாள் கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளை நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img