December 6, 2025, 12:18 AM
26 C
Chennai

ஆந்திரம்… ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும்! அழுதுவடிந்த என்டிஆர் சமாதி; ஆவேசத்தில் பேரன்கள்!

juniorNRT - 2025

பொறுமை இழந்த ஜூனியர் என்டிஆர் இனி தாத்தாவின் நிகழ்ச்சிகளை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறினார்.

என்டி ராமராவின் பேரன்கள் தாரக், கல்யாண்ராம் இருவரும் காலையில் எழுந்து அஞ்சலி செலுத்துவதற்காக என்டிஆர் காட் அருகில் சென்றபோது அங்கே ஒரு பூ கூட இல்லை. பூக்களின் அலங்காரத்தோடு அழகாக திகழ வேண்டிய என்டிஆர் சமாதி களையிழந்து காணப்பட்டது! இதைப் பார்த்ததும் திடுக்கிட்ட பேரன்கள் பொறுமை இழந்தனர்! ஏற்பாடுகள் சரிவர செய்யப் படாததைக் கண்டித்தனர்!

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர், ஒன்றுபட்ட ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த நந்தமூரி தாரக ராமாராவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சமாதி அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதைக் கண்டதும் அவருடைய ரசிகர்களும் குடும்பத்தாரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தெலுங்கு மக்களின் தன்மானச் சின்னமாகக் கருதப்படும் என்டிஆரின் பிறந்தநாள் அன்று அவருடைய சமாதியை அலங்கரித்து வைக்காத நிர்வாகிகள் மீது எரிந்து விழுந்தார்கள்.

பேரன்கள் தாரக் கல்யாண்ராம் இருவரும் தாத்தா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு செவ்வாய் அன்று விடிகாலை என்டிஆர் நினைவிடத்திற்குச் சென்றனர். அந்நேரம், சமாதியில் ஒரு மலர் கூட இல்லாததைக் கண்டு திடுக்கிட்டனர்!

உடனே ஜூனியர் என்டிஆர் தன் ரசிகர்கள் மூலமும் பெரிய அளவில் ஏகத்துக்கும் மலர்களை வரவழைத்தார்! என்டிஆர் அபிமானிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு சமாதியை அலங்கரித்தனர்! பின் பேரன்கள் இருவரும் தாத்தாவின் சமாதியில் மலர்ச் செண்டுகள் வைத்து வணங்கினர்!

சற்று நேரம் அமைதியாக அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ஜெயந்தி ஏற்பாடுகள் சரிவர இல்லை என்று வருத்தம் அடைந்த ஜூனியர் என்டிஆர், இனி தாத்தாவின் ஜெயந்தி, நினைவு நாள் கொண்டாட்டங்களின் ஏற்பாடுகளை நானே நேரடியாக கவனித்துக் கொள்கிறேன் என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories