சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்தது என்டிஆரின் ஆத்மா: லட்சுமி பார்வதியின் சாபம்!

juniorNRT sivaparvathi - 2026

என்டிஆர்  பிறந்த நாள் அன்று அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த லட்சுமி பார்வதி வருத்தத்துடன் திரும்பிச் சென்றார்! ஏற்பாடுகள் சரியில்லை என்று சந்திரபாபு நாயுடுவை குறை கூறினர்!

இது குறித்து லட்சுமி பார்வதி கூறிய போது, “என்டிஆர் சமாதியை அலங்கரிக்க வேண்டிய பொறுப்பு சந்திரபாபு நாயுடு உடையதே. மகாநாடு நடத்துவதைக் கூட நிறுத்திவிட்டார். சமாதி அலங்கரிப்பதையும் ஏன் நிறுத்திவிட்டார்?

ஆட்சி போனாலும் மாப்பிள்ளையாக இது அவருடைய பொறுப்பு தானே! கட்சியையும் அரசாட்சியையும் கையகப்படுத்திக் கொண்டு நன்றாகத்தானே சம்பாதித்தார்!

ஒரு பத்து லட்சம் செலவு செய்து சமாதியை அலங்கரிக்க கூடாதா? பேனர் கூட வைக்க வில்லையே!” என்று மிகவும் கோபமாக விமர்சித்தார் லட்சுமி பார்வதி. மேலும், சந்திரபாபு நாயுடுவைத் தோற்கடித்து, அவர் செய்த கர்மங்களுக்காக என்டிஆர் தன் கோபத்தை தீர்த்துக் கொண்டார்” என்றார்.

அவருடைய ஆத்மா தற்போது சந்தோஷமாக இருக்கும் என்று கூறிய லட்சுமி பார்வதி, சந்திரபாபு செய்த பாவம் தவறுகள் இவற்றுக்கு நல்ல தண்டனை கிடைத்துள்ளது  என்று குமுறுக் கொண்டு கொட்டித் தீர்த்தார்!

இன்னும் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு ஜெகன்தான் முதலமைச்சராக இருப்பார். என்டிஆர்., ஒய்எஸ்ஆர்., ஆகியோரின் ஆசீர்வாதத்தால், கடந்த தனது ஆட்சியில் செய்த தவறுகாளால்தான் ஜெகன் முதலமைச்சரானார் என்று கோபத்துடன் கூறினார்.

லட்சுமி பார்வதி பேசிக் கொண்டிருந்த போதே சந்திரபாபு நாயுடுவின் விசுவாசிகள் அவரைப் பேசவிடாமல் கூச்சலிட்டனர். இதனால் அவர் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்!

1993ல் என்.டி.ராமாராவ் லட்சுமி பார்வதியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என்.டி.ஆர்., மறைந்த பின்னர் கட்சி லட்சுமிபார்வதி கைக்கு வந்தது. அவரிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டு பின்னாளில் ஆட்சிக்கு வந்தவர் சந்திரபாபு நாயுடு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories