திருச்சி: நிறைவேற்ற முடியாத அளவிற்கு தவறான வாக்குறுதிகளை அளித்து அரவிந்த் கேஜ்ரிவால் தில்லியில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். தில்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வி தொடர்பாக திருச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… தில்லியில் பா.ஜனதா முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டதும் கட்சியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் பதவியில் இருந்தபோது நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டார். கேஜ்ரிவால் மக்களிடம் தவறான வாக்குறுதிளை அளித்து வெற்றி பெற்றுள்ளார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மத்திய அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து வருகிறது. 8 மாதங்களில் பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி. மோடிக்கு இன்னும் நல்ல இமேஜ் உள்ளது. ‘‘ஜன்தன் யோஜனா” திட்டத்தில் நாடு முழுவதும் 11 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் வரம்பு மீறி செயல்படக்கூடாது என்று மோடி பலமுறை அறிவுறுத்தி உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் கேஜ்ரிவால்: தமிழிசை சௌந்தர்ராஜன்
Popular Categories


