December 5, 2025, 6:31 PM
26.7 C
Chennai

விராட் கோலி அதிரடி சதம்: 6வது போட்டியில் வென்ற இந்திய அணி 5-1 என தொடரைக் கைப்பற்றி அசத்தல்

விராட் கோலி அதிரடி சதம் அடித்து அசத்தலாகக் கைகொடுக்க, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 6வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. முதல் ஐந்து போட்டிகளின் முடிவில், இந்தியா 4-1 என ஏற்கெனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இன்று ஆறாவது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, ஷர்துல் தாகூர்க்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தென் ஆப்ரிக்க அணிக்கு ஷர்துல் சிம்மசொப்பனமாக விளங்கினார். இவரது ‘வேகத்தில்’ ஆம்லா (10), கேப்டன் மார்க்ரம் (24) ஆட்டமிழந்தனர். சகால் ‘சுழலில்’ டிவிலியர்ஸ் (30) ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் இணைந்த ஜோன்டோ, கிளாசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பும்ரா பந்தில் கிளாசன் (22) ஆட்டம் இழந்தார். தாகூர் பந்துவீச்சில் பெகார்டியன் (1) பெவிலியன் திரும்பினார். கிறிஸ் மோரிஸ் 4 ரன்கள் எடுத்தார். ஜோன்டோ (54) அரை சதம் அடித்தார். இப்படி அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததால், தென் ஆப்ரிக்க அணி 46.5 ஓவரில் 204 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் விரைவாக ரன்களை சேர்த்தனர். 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இந்திய கேப்டன் விராத் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்த சதத்துடன் ஒரு நாள் அரங்கில் தனது 35 வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. இதை அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் திருமணம் முடிந்த கையுடன் விளையாடி அணிக்கு அபார வெற்றி பெற்றுத் தந்துள்ளார் என்பதுடன், அதிக ரன்களும் குவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories