லஞ்சம் பெறுவோர் குறித்து புகார் செய்ய தொலைபேசி எண்: அறிவித்தார் கேஜ்ரிவால்

Published:

புதுதில்லி: லஞ்சம் பெறுவோர் குறித்து பொதுமக்கள் புகார் செய்வதற்கான தொலைபேசி எண்ணை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் பெறும் தில்லி அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இரண்டாவது முறையாக தில்லி முதல்வர் ஆகியிருக்கும் கேஜ்ரிவால், மீண்டும் ஒரு ஜனதா தர்பாரை நடத்தினார். உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நேற்று இந்த மக்கள் குறை கேட்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சி நடந்தது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவரைச் சந்தித்தனர். அப்போது அவர் மக்களுடைய குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். கேஜ்ரிவாலை சந்தித்த பொது மக்களில் பெரும்பாலானோர் குடிநீர் வினியோக அதிகாரிகள் மற்றும் தில்லி போலீசார் மீது அதிக அளவில் லஞ்சப் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து, லஞ்சம் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய கேஜ்ரிவால், இதற்கு வசதியாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஊழல் செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி 011–27357169 என்ற எண்ணில் இது குறித்து புகார் செய்யலாம். தகவல் கொடுப்பவரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img