இஸ்ரேலை ஒட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயப் புதையலை கடல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இந்தக் கப்பலில் சுமார் 2,000 தங்க நாணயங்கள் இருந்துள்ளதாகத் தெரிகிறது. இஸ்ரேல் நாட்டின் செசரியா என்ற இடத்தில் மிகப் பழைமையான துறைமுகப் பகுதியில் இது கண்டெடுக்கப்பட்டது. இஸ்ரேலில் இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப் பெரிய அளவிலான தங்க நாணயப் புதையல் இது என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் புதையல்களைத் தேடும் கடல் ஆய்வாளர்கள் குழு ஒன்று மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் இந்தத் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் ஒன்பது கிலோ கிராம் எடை கொண்டவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். விலைமதிப்பற்றவை இவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தங்க நாணயங்கள் பாதிமித் கலீபத் காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. ஷியா பிரிவு இஸ்லாமியப் பேரரசான பாதிமித் கலீபத் கி.பி. 909 முதல் 1171 வரை மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தது.
எகிப்தில் இருந்த மத்திய அரசுக்கு நாட்டின் பிற பகுதியில் இருந்து வரிப் பணத்தை ஏற்றிச் சென்றபோது, இந்தக் கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்றும், அதை அடுத்தே இந்த நாணயங்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் இஸ்ரேலைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ஹெர்வித் கூறியுள்ளார். அப்படி இல்லை எனில், செசரியா நகர் பாதுகாப்புப் பணியிலிருந்த பாதிமித் படையினருக்கு வழங்க சம்பளமாகக் கொண்டு வந்த நாணயங்களாகவும் இவை இருக்கலாம், அல்லது வர்த்தக கப்பலின் நாணயங்களாகவும் இருக்கலாம் என்றும் ஹெர்வித் இது குறித்துக் கூறியுள்ளார். இருப்பினும், இந்தப் புதையல் அரசின் சொத்தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தத் தங்கக் காசுப் புதையலைக் கண்டுபிடித்தவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=Zo-U2IC5PVY”]
இஸ்ரேல்: மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயப் புதையல்!
Popular Categories


