பாட்னா: பீகார் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மாஞ்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முன்னர், கடைசி நேரத்தில் பதவி விலகினார். இதனை அடுத்து பீகாரின் அடுத்த முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி ஏற்றுக்கொள்கிறார். இவரின் பதவியேற்பு விழா வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கும் நிதிஷ் குமாருக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் பீகார் முதல்வராகப் பதவியேற்கும் நிதிஷ் குமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள என்று தெரிவித்துள்ளார்.

