மதமாற்றம் தொடர்பான வழக்கு; அரசியல் சாயம் கொடுப்பதை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

supreme court of india - 2026

கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில், அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இது முக்கியமான பிரச்னை. உங்கள் அரசியலை இதில் கலக்க வேண்டாம்’ என உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கடுமையுடன் குறிப்பிட்டது.

கட்டாய மதமாற்றம் தொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மக்களை அச்சுறுத்தியும், பரிசுகள், பணப் பலன்கள் வழங்கி ஏமாற்றியும் நடக்கும் மதமாற்று மோசடியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘கட்டாய மதமாற்றம் என்பது மிகப் பெரும் பிரச்னையாகும். இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது’ என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் அமர்வு கேட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறுக்கிட்டு, ”இது அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு. தமிழகத்தில் இதுபோன்று கட்டாய மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு அமர்வு கண்டனம் தெரிவித்தது. நீங்கள் இவ்வாறு கொந்தளிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். நீதிமன்றத்தை வேறொரு களமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். நாங்கள் நாடு முழுதும் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து வருகிறோம். கட்டாய மதமாற்றம் என்பது நிச்சயம் மிகப் பெரும் பிரச்னைதான். உங்கள் மாநிலத்தில் அந்தப் பிரச்னை இருந்தால், அது ஆபத்து; இல்லாவிட்டால் நல்லது. உங்களைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எப்படி கருதுகிறீர்கள். இந்த விவகாரத்தை வீணாக அரசியலாக்க வேண்டாம்… என்று கண்டித்தனர்.

இதை அடுத்து, வழக்கின் விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories