December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்த திமுக., கூட்டணியினர்: பாஜக., புகார் மனு!

governor walkout2 - 2025

வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் மீது மேதகு ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக,  இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளேன் என்று, பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: 

பெறுதல்:
காவல் ஆணையர், சென்னை

வணக்கம்,
பொருள்: இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்தல் சார்பு.

இன்று காலை தமிழக சட்டசபையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் ஆகியோர், ஆளுநர் அவர்களுக்கு எதிராக கும்பலாக நின்று, அவரை மிரட்டுகிற தொணியில், கூச்சலிட்டும் சத்தம் எழுப்பியும் மிரட்டல் விடுத்து அவரை பயமுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தோடு, அதற்கு உண்டான சைகைகளை செய்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 ஆவது சரத்தின் படி ஆளுநருக்கு உண்டான மிக முக்கியமான பணியான ஆளுநர் உரையை நிகழ்த்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆளுநர் உரையை நிறுத்த வேண்டும் என்று சத்தம் எழுப்பியும் சைகைகள் செய்தும் கூச்சலிட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் படி தண்டனை குற்றங்களாக சொல்லப்பட்டு இருக்கக்கூடிய குற்றங்களை வேண்டும் என்றே செய்தும் உள்ளார்கள்.

மேதகு ஆளுநரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது ஷரத்தின் கீழ் உள்ள முக்கியமான பணியை செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இது ஷரத்து 194(2) சொல்லப்பட்டுள்ள விதிவிலக்கின் கீழ் வராது. ஆகவே உடனடியாக மேற்கூறப்பட்டுள்ள நபர்கள் வேல்முருகள், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை. சிந்தனைசெல்வன் உள்ளிட்ட மற்றும் பலர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட1 நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories