February 21, 2026, 5:57 PM
29 C
Chennai

ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்த திமுக., கூட்டணியினர்: பாஜக., புகார் மனு!

governor walkout2 - 2026

வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் மீது மேதகு ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக,  இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளேன் என்று, பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: 

பெறுதல்:
காவல் ஆணையர், சென்னை

வணக்கம்,
பொருள்: இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்தல் சார்பு.

இன்று காலை தமிழக சட்டசபையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் ஆகியோர், ஆளுநர் அவர்களுக்கு எதிராக கும்பலாக நின்று, அவரை மிரட்டுகிற தொணியில், கூச்சலிட்டும் சத்தம் எழுப்பியும் மிரட்டல் விடுத்து அவரை பயமுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தோடு, அதற்கு உண்டான சைகைகளை செய்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 ஆவது சரத்தின் படி ஆளுநருக்கு உண்டான மிக முக்கியமான பணியான ஆளுநர் உரையை நிகழ்த்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆளுநர் உரையை நிறுத்த வேண்டும் என்று சத்தம் எழுப்பியும் சைகைகள் செய்தும் கூச்சலிட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் படி தண்டனை குற்றங்களாக சொல்லப்பட்டு இருக்கக்கூடிய குற்றங்களை வேண்டும் என்றே செய்தும் உள்ளார்கள்.

மேதகு ஆளுநரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது ஷரத்தின் கீழ் உள்ள முக்கியமான பணியை செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இது ஷரத்து 194(2) சொல்லப்பட்டுள்ள விதிவிலக்கின் கீழ் வராது. ஆகவே உடனடியாக மேற்கூறப்பட்டுள்ள நபர்கள் வேல்முருகள், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை. சிந்தனைசெல்வன் உள்ளிட்ட மற்றும் பலர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட1 நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories