ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்த திமுக., கூட்டணியினர்: பாஜக., புகார் மனு!

governor walkout2 - 2026

வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் மீது மேதகு ஆளுநரை பணிசெய்யவிடாமல் தடுத்ததற்காக,  இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளேன் என்று, பாஜக.,வைச் சேர்ந்த வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட தகவல்: 

பெறுதல்:
காவல் ஆணையர், சென்னை

வணக்கம்,
பொருள்: இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் கீழ் புகார் அளித்தல் சார்பு.

இன்று காலை தமிழக சட்டசபையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது வேல்முருகன், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைசெல்வன் மற்றும் பலர் ஆகியோர், ஆளுநர் அவர்களுக்கு எதிராக கும்பலாக நின்று, அவரை மிரட்டுகிற தொணியில், கூச்சலிட்டும் சத்தம் எழுப்பியும் மிரட்டல் விடுத்து அவரை பயமுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தோடு, அதற்கு உண்டான சைகைகளை செய்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 176 ஆவது சரத்தின் படி ஆளுநருக்கு உண்டான மிக முக்கியமான பணியான ஆளுநர் உரையை நிகழ்த்தவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆளுநர் உரையை நிறுத்த வேண்டும் என்று சத்தம் எழுப்பியும் சைகைகள் செய்தும் கூச்சலிட்டும் இந்திய தண்டனைச் சட்டம் 124 வது பிரிவின் படி தண்டனை குற்றங்களாக சொல்லப்பட்டு இருக்கக்கூடிய குற்றங்களை வேண்டும் என்றே செய்தும் உள்ளார்கள்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

மேதகு ஆளுநரை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 176 ஆவது ஷரத்தின் கீழ் உள்ள முக்கியமான பணியை செய்ய விடாமல் தடுக்க முயற்சி செய்துள்ளனர். இது ஷரத்து 194(2) சொல்லப்பட்டுள்ள விதிவிலக்கின் கீழ் வராது. ஆகவே உடனடியாக மேற்கூறப்பட்டுள்ள நபர்கள் வேல்முருகள், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை. சிந்தனைசெல்வன் உள்ளிட்ட மற்றும் பலர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தக்க சட்ட1 நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories