கேரளா-ரெயிலில் வாக்குவாதம் சக பயணியை கீழே தள்ளி கொலை..

images 26 - 2026

கேரளாவில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாக்குவாதம் முற்றியதில் சக பயணியை கீழே தள்ளி விட்டு கொலை செய்த தமிழக நபரை போலீசார் கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கோயிலண்டி பகுதியில் ரெயில் தண்டவாள பகுதியில் கிடந்த 25 வயது ஆடவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் மலபார் எக்ஸ்பிஸ் ரெயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் மோதல் முற்றியதில், சக பயணியை ஒருவர் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு உள்ளார். இந்த சம்பவத்தில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்ட பகுதியை சேர்ந்த சோனைமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், அவர் உண்மையை ஒப்பு கொண்டார். இதுபற்றிய வீடியோ ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

அதில், 2 பேரும் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில், கோபத்தில் கதவு பக்கத்தில் நின்ற சக பயணியை கைது செய்யப்பட்ட பயணி தள்ளி விடுகிறார். வீடியோ சான்றின் அடிப்படையில், அந்நபரை காவலில் எடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின்போது போதையில் குற்றவாளி இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. விசாரணையில் அந்நபர் யாரென தனக்கு தெரியாது என்றும், பயணத்தின்போது சந்தித்த நபர் என்றும் கூறியுள்ளார். எனினும், அந்த இளைஞரை தள்ளி விட்டதற்கான காரணம் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை. அடையாளம் காணப்படாத அந்த இளைஞர், புலம்பெயர் தொழிலாளி என முதற்கட்ட விசாரணை முடிவில் போலீசார் முடிவுக்கு வந்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்ற மற்றொரு சம்பவம் கோழிக்கோட்டில் கடந்த மாதம் நடந்தது. உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியான விவேக் என்பவர் கண்ணூர் எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசில் பயணித்தபோது, நண்பரான முபாதூர் இஸ்லாம் என்பவரால் கீழே தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வடகரா ரெயில் நிலையத்தில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories