spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்-பிரதமர் மோடி..

அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்-பிரதமர் மோடி..

- Advertisement -

அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மகாத்மா காந்திக்கும், தண்டி யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 


பல விதமான அநீதிகளுக்கு எதிராக உறுதியுடன் மேற்கொள்ளப்பட்ட தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1930-ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் தண்டி யாத்திரை எனவும் அறியப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தண்டி யாத்திரை மிக முக்கிய நிகழ்வாகும். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் சத்தியாகிரகிகள் பலர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர்.

இந்த உப்பு சத்தியாகிரக யாத்திரை அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மார்ச் 12, 1930 ஆம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் 5, 1930 வரை நடைபெற்றது. இந்த யாத்திரை தண்டியை சென்றடைந்து அங்கு கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டது. இதன்மூலம், உப்பு எடுக்க ஆங்கிலேயர்களால் போடப்பட்டிருந்த சட்டத்தினை சத்தியாகிரகிகள் மீறினர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை தினத்தில் மகாத்மா காந்திக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,174FansLike
387FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,898FollowersFollow
17,300SubscribersSubscribe