24-03-2023 2:16 PM
More
    Homeஇந்தியாஅநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்-பிரதமர் மோடி..

    To Read in other Indian Languages…

    அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்-பிரதமர் மோடி..

    images 47 - Dhinasari Tamil

    அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மகாத்மா காந்திக்கும், தண்டி யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 


    பல விதமான அநீதிகளுக்கு எதிராக உறுதியுடன் மேற்கொள்ளப்பட்ட தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
    1930-ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் தண்டி யாத்திரை எனவும் அறியப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தண்டி யாத்திரை மிக முக்கிய நிகழ்வாகும். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் சத்தியாகிரகிகள் பலர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர்.

    images 46 - Dhinasari Tamil

    இந்த உப்பு சத்தியாகிரக யாத்திரை அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மார்ச் 12, 1930 ஆம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் 5, 1930 வரை நடைபெற்றது. இந்த யாத்திரை தண்டியை சென்றடைந்து அங்கு கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டது. இதன்மூலம், உப்பு எடுக்க ஆங்கிலேயர்களால் போடப்பட்டிருந்த சட்டத்தினை சத்தியாகிரகிகள் மீறினர்.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை தினத்தில் மகாத்மா காந்திக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten + 12 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...