IPL 2023: ரிங்கூ சிங் பரிதாபம்

ipl 2023 matches - 2026
#image_title

ஐ.பி.எல் 2023 – 18ஆம் நாள் – 17.04.2023
எப்போது இந்த நிலை. ரிங்கூ சிங் பரிதாபம்

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2023 தொடரின் 18ஆம் நாளான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் கேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி வென்றது. சென்னை அணி (226/6, கான்வே 83, ஷிவம் டூபே 52, ரஹானே 37, பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கட்) பெங்களூரு அணியை (218/8, ட்யூ ப்ளேசிஸ் 62, மேக்ஸ்வெல் 76, தினேஷ் கார்த்திக் 28, பிரபுதேசாய் 19, துஷார் தேஷ்பாண்டே 3/45, ) 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி சென்னை அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஜிங்க்யா ரஹானே (20 பந்துகள் 37 ரன்) மற்றொரு தொடக்க வீரர் கான்வேயுடன் இணைந்து ஆடினார். அதன் பின்னர் ஆடவந்த ஷிவம் டூபே 27 பந்துகளில் 52 ரன் அடித்தார். கான்வே 16ஆவது ஓவர் வரை விளையாடி 45 பந்துகளில் 83 ரன் சேர்த்தார். அதன் பின்னர் அம்பாதி ராயடு (14 ரன்), மொயின் அலி (19 ரன்), ஜதேஜா (10 ரன்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு சென்னை அணி 226 ரன் எடுத்திருந்தது. சென்னை அணி மட்டையாளர்கள் 12 ஃபோர், 17 சிக்சர்கள் அடித்தனர்.

அதன்பின்னர் ஆடவந்த பெங்களூரு அணிக்கு முதல் ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது, விராட் கோலி 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மஹிபாலும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ட்யூ ப்ளேசிஸ், மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக ஆடினர். இருப்பினும் மேக்ஸ்வெல் (76 ரன்) 13ஆவது ஓவரிலும், ட்யூ ப்ளேசிஸ் (62) 14ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். ஷபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருக்கும் இது சிறந்த வாய்ப்பு; இருந்தபோதிலும் இவர்கள் இருவரும் 17 மற்றும் 18ஆவது ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அப்போது 17 பந்துகளில் 35 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. ஆனால் அனுபவமில்லாத பெங்களூரு வீரர்களால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கான்வே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories