புது தில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்று அக்கட்சி கருத்து தெரிவி்த்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கோரி சிவசேனா தரப்பில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

