சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ புதிய தலைவராக ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ பொதுக் குழுக் கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வார காலத்துக்குள் ஆண்டு பொதுக் குழுவைக் கூட்டி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில், மார்ச் 2-ம் தேதி ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவராக டால்மியா தேர்வு
Popular Categories


