
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் DS-SAR புவி கண்காணிப்பு செயற்கை கோள் உள்பட 7 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன. பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் இது நிலைநிறுத்தப்படும்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்டை ஏவுவதற்கான 25.30 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 5.30க்கு தொடங்கியது. பின், திட்டமிட்டபடி காலை 6.30க்கு ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த ராக்கெட்டில் சிங்கப்பூரின் 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்-சார்’ என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் இணைக்கப் பட்டு விண்ணில் ஏவப்பட்டன. ‘டிஎஸ்-சார்’ செயற்கைக்கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது. ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கைத் துளை ரேடார் கருவியைக் கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அனைத்து வானிலைத் தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டது.
ராக்கெட்டுடன் செலுத்தப்பட்ட ஏழு செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கைக்கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது.
ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.