பிரிவினை ஏற்படுத்த ஆரிய- திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப் பட்டது: ஆளுநர் ரவி பேச்சு!

governor speech in deendayal upadyay book release - 2026

ஆரிய திராவிட வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது அது பிரிவினையை ஏற்படுத்த பயன்பட்டது நாம் அனைவரும் ஒன்று ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் கருத்து. அவரின் சேவைகளை, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி பேசினார்.

ஏகாத்ம மானவ வாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பு வெளியீட்டு விழா ஜூலை 29 சனிக்கிழமை, சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

அதில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி தீந்தயாள் உபாத்யாய நூல் தொகுப்பை வெளியிட்டார். துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, Research and Development foundation for integral humanism- Tamilnadu Chapter தலைவர் மகேஷ் சந்திரா சர்மா, இரட்டைமலை சீனிவாசன் மற்றும் பண்டிதர் அயோத்திதாசர் கொள்ளு பேத்தி நிர்மலா அருள்பிரகாஷ், இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் செயல்பாடுகளும், தத்துவங்களும் நம் அன்றாட வாழ்வில் வெளிப்பட்டபடியே உள்ளது. நம் நாடு முன்னோக்கிச் செல்வதற்காகப் பாடுபட்டவர் தீன்தயாள் உபாத்யாய. அவர், அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தினார்… என்றார்.

மேலும், இந்த பிரபஞ்சத்தை ஒரே பரமேஸ்வரன் தான் படைத்தார். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன்தான் இருந்தோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில், குறிப்பாக 400 ஆண்டுகள்தான் அடிமையாக இருந்தோம். மேற்கத்தியவர்களிடம் ராணுவ பலம், தொழில்புரட்சி இருந்தன. அவை நம்மை விட உயர்ந்தது என்று நினைத்து வேறு வழியில்லாமல் நாம் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தற்போது அதுவே நம் கலாசாரமாக மாறிவிட்டது.

மேற்கத்திய நாட்டவர்களால் தான் நம்மிடையே பிரிவினை ஏற்பட்டது. ஆரியர்- திராவிடர் என்ற வாதம் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிரிவினையை ஏற்படுத்தியது.

தற்போது மொழியின் பெயரில் சிறுபான்மை மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. பலர் பள்ளிகளை நடத்துகிறார்கள். அதில் அவர்களின் தாய்மொழியில்கூட கற்றுத் தருவதில்லை. ஒரே நிலத்தில் இருந்தவர்கள்கூட, மொழியால் தங்களை இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

உலகளாவிய ஒருமைப்பாடு பற்றிக் கூறிய ஒரே நாடு இந்தியாதான். இந்தியாவே உலகிற்கு ஒளி காட்டுகிறது. நம் பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீன்தயாள் உபாத்யாயவின் தத்துவம் இருக்க வேண்டும். அவரின் நூல் தொகுப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, ஆய்வுகள் பல மேற்கொண்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தீன்தயாள் உபாத்யாயாவின் கருத்துகள், அவர் ஆற்றிய சேவைகளை பாடமாகவும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories