ஹைதராபாத்: தெலங்கானாவில் ரிலையன்ஸ் எரிவாயு பைப் லைனில் வாயு கசிவு தெலங்கானாவின் சங்கரெட்டி பகுதி வழியே செல்லும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிவாயு பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனை அடுத்து துரித கதியில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காக்கிநாடாவிலிருந்து கிழக்கு கோதாவரி வழியே குஜராத்தின் பரீச் பகுதி வரை இயற்கை எரிவாயு பைப் லைன் உள்ளது. இந்த நிலையில் திங்கள் கிழமை இன்று காலை தெலங்கானாவின் மதிகுந்தா கிராமப் பகுதியில் அமைந்துள்ள பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் மும்பையிலிருந்து ரிலையன்ஸ் அதிகாரிகளும் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எச்சரிக்கை அளித்தனர். அப்போது பைப்லைனிலிருந்து ஏற்பட்ட சிறு தீ உடனடியாக கட்டுப்படுத்தப் பட்டு, மேலும் பாதிப்புகள் பரவமால் இருக்க எரிவாயு குழாயில் சப்ளை நிறுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரிலையன்ஸ் பணியாளர்களின் துரித நடவடிக்கையால், எரிவாயு கசிவினால் ஏற்பட இருந்து மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
To Read this news article in other Bharathiya Languages
தெலங்கானா: ரிலையன்ஸ் பைப் லைனில் எரிவாயு கசிவு; பெரும் விபத்து தவிர்ப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari