இலங்கை நாடாளுமன்றம் ஏப்.23ல் கலைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

Published:

ranil-wickramasinge கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 23-ந் தேதி கலைக்கப்படும். இந்நிலையில் மார்ச் மாதம் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 23-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிபர் மைத்ரீபால சிறீசேனவும் இலங்கை சுதந்திரக் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மண்டல அலுவலகங்கள், இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியை பலப்படுத்துமாறு அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img