புது தில்லி: மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 5 வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இனி ரூ. 610–க்கு விற்பனை செய்யப் படும். மேலும், விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ. 3,849 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 7 முறை குறைக்கப்பட்டது. மொத்தம் ரூ. 317.50 வரை விலை குறைக்கப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply