aditya l1 isro - 2026
#image_title

செப்.2 நாளை விண்ணில் பாய ஆதித்யா எல்-1-ன் தயார் நிலையில் உள்ளதாகவும், அதற்கான கௌன்ட் டௌன் இன்று தொடங்குவதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்- 1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செப்.2 ம் தேதி முற்பகல் 11:50 க்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட உள்ளது. அதன் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டபடி செப். 02 காலை 11:50 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்கான கௌன்ட் டௌன் 1ம் தேதி தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending