WC 2023: இரண்டு ஆட்டங்கள், ரன்கள் ’மெகா’வும் குறைவும்!

Published:

world cup cricket 2023 - 2026

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
மூன்றாம் நாள் இரண்டு ஆட்டங்கள்,
07.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் வங்கதேச, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது. இரண்டாவது போட்டி டெல்லியில் தென் ஆப்பிர்க்கா, இலங்கை அணிகளுக்கிடையே நடந்தது.

வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான் அணியை (37.2 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட், குர்பாஸ் 47, ஷாகிப் 3/30, மிராஸ் 3/25, இஸ்லாம் 2/34) வங்கதேச அணி (34.4 ஓவரில் 158/4, ஷண்டோ 59*, மிராஸ் 57) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம் இது. ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு எந்த வகையிலும் சம்மாக இல்லை. எனவே வங்கதேச அணி எளிதில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா vs இலங்கை

தென் ஆப்பிரிக்க அணி (428/5, டி காக் 100, ராசி வான் டெர் டுஸ்ஸென் 108, மர்கரம் 106, மதுஷங்கா 2/86) இலங்கை அணியை (44.5 ஓவரில் 326 ஆல் அவுட், குசால் மெண்டிஸ் 76, அசலங்கா 79, தசுன் ஷனகா 68, ரஜிதா 33, ஜெரால்ட் 3/68, கேசவ் மகராஜ் 2/62, ரபாடா 2/50, ஜேன்சன் 2/92) 102 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

94.5 ஓவர்களில் மொத்தம் 754 ரன்கள் அடிக்கப்பட்ட ஹை ஸ்கோரிங் ஆட்டம் இது. தென் ஆப்பிரிக்க அணியில் மூன்று சதம் அடிக்கப்பட்டது. அதில் உலகக் கோப்பையில் அதிவேக சதம்.

(1) உலகக் கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் 428/5 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்திலும் அதிக பட்ச ஸ்கோர்.
(2) ஒரு இன்னிங்ஸில் மூன்று சதம் என்பது இது நாலாவது முறை.
(3) மர்கரம் அடித்த 49 பந்து சதம் உலகக் கோப்பையின் அதிவேக சதம்
(4) மொத்தத்தில் 107 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
(5) மொத்தமாக 754 ரன்கள் உலகக் கோப்பையில் ஒரு சாதனை. இதற்கு முன்னர் 2019இல் ஆஸ்திரேலியா வங்கதேச ஆட்டத்தில் 714 ரன்கள் அடிக்கப்பட்டது.

இலங்கை அணி மறக்க நினைக்கும் ஒரு ஆட்டம். நாளை இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் சென்னையில் நடக்க உள்ளது. மாலை 15:00 மணிக்கு மேல் 20:00 மணிக்குள் மழை வருதற்கான 40% வாய்ப்பு உள்ளது.
ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img