December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

WC 2023: ஆச்சரியப் படுத்திய ஆப்கன்! அப்செட் ஆன இங்கிலாந்து!

world cup cricket 2023 - 2025
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி பதினோராம் நாள்
ஆப்கானிஸ்தான் vs இங்கிலாந்து
டெல்லி – 15.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284, குர்பாஸ் 80, அலிகில் 58, அதில் ரஷீத் 3/42, மார்க் வுட் 2/50) இங்கிலாந்து அணியை  (40.3 ஓவரில் 215 ஆல் அவுட்,ஹாரி ப்ரூக் 66, டேவிட் மலான் 32, முஜிபுர் ரஹ்மான் 3/51, ரஷீத் கான் 3/37) 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து அணியை வென்றது இந்த ஒருநாள் உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்செட்; அதிர்ச்சி; இங்கிலாந்து முதல் நான்கு அணிகளுள் ஒன்றாக வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியுற்றுள்ளது.

பூவா தலையா வென்ற இங்கிலாந்து அணி, மிகத் தன்னம்பிக்கையோடு ஆப்கானிஸ்தான் அணியை மட்டையாடச் சொன்னது. அந்த அணி அடித்த 284 என்ற ஸ்கோருக்கு எதிராக இரண்டாவதாக விளையாடிய இங்கிலாந்து அணி தடுமாற்றத்துடன் ஆடியது.

முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (80 ரன்), இக்ரம் அலிகில் (58 ரன்) ஆகியோரைத் தவிர சத்ரன் (28 ரன்), முஜிபுர் ரஹ்மான் (28 ரன், ரஷீத் கான் (23 ரன்) ஆகியோரும் நன்றாக ஆடினர். இதனால் 50 ஓவர் வரை அவர்களால் ஆட முடிந்தது; மேலும் ரன்ரேட்டை 5.69 என்ற நிலையில் அவர்களால் வைக்கமுடிந்தது.

இங்கிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் சேர்க்க முடிந்தது.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது டேவிட் மலான், ஹாரி ப்ரூக் ஆகியோரைத் தவிர பிறர் சரியாக விளையாட வில்லை. இதனால் 40.3 ஓவரில் இங்கிலாந்து அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மகத்தான வெற்றி; இங்கிலாந்துக்கு இனிமேல் கவனமாக ஆட ஒரு பெரிய விழிப்புணர்வு அழைப்பு. மூன்று ஆட்டங்களில், இரு அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இன்னும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு மேலும் தோல்விகளுக்கு இடமில்லை.

இதற்கு முன்பு இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகு இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அடுத்த சனிக்கிழமை தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மோதல் அவர்களுக்குக்  கடினமாக இருக்கலாம்.

ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்டம், சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம். இன்றைய வெற்றியின் பின்னணியில், ஆப்கானிஸ்தான் மீண்டும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க விரும்பும்.

ஆனால், அதற்கெல்லாம் முன்பாக, தற்போது அட்டவணையில் கடைசி இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி நாளை பட்டியலில் கீழிருந்து மூன்றாவதாக, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories