WC 2023: பரபரப்பு, விறுவிறுப்பு… நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
18ஆம் நாள் – நியூசிலாந்து vs இந்தியா
தர்மசலா – 22.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

நியூசிலாந்து அணியை (273, டேரில் மிட்சல் 130, ரச்சின் 75, பிலிப்ஸ் 23, ஷமி 5/54, குல்தீப் 2/73) இந்திய அணி (48 ஓவரில் 274/6, ரோஹித் ஷர்மா 46, விராட் கோலி 95, ஷ்ரேயாஸ் ஐயர் 33, ராகுல் 27, ஜதேஜா 39) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் இன்று இரண்டு மாற்றங்கள். காயம் காரணமாக ஹார்திக் பாண்ட்யா ஆடவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் ஆடினார். ஷர்துல் தாகூருக்குப் பதிலாக முகம்மது ஷமி ஆடினார். முகமது ஷமி இன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு முறை இதைச் செய்த முதல் இந்தியர் ஷமி ஆவார்.

          ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இடையே ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணிக்கு அமைந்தது. பும்ரா சில பயங்கர யார்க்கர்கள் வீசினார். 50 ஓவர்களுக்குள் சில சந்தர்ப்பங்களில் ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாகவும், சில சந்தர்ப்பங்களில் நியூசிலாந்துக்குச் சாதகமாகவும் மாறியது.

இறுதியில், கடைசி ஆறு ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நியுசிலாந்து அணி மோசமாக பாதிக்கப்பட்டது. அவர்கள் நடு ஓவர்களில் உருவாக்கிய முடுக்கத்தைப் இறுதியில் பெறத் தவறிவிட்டனர். அதற்கான பெருமை குல்தீப் யாதவின் வலுவான ரிட்டர்ன் ஸ்பெல்லுக்குச் சேர வேண்டும். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து 8 ஓவரில் 19/2 என்று இருந்தது. பிறகு 33.3 ஓவரில் 3/178 என்ற நிலைக்கு வந்தது. மிட்செல் 130 ரன்கள் அடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 273 ரன் எடுத்தது.

          பின்னர் ஆடவந்த இந்திய அணிக்கு வழக்கம்போல ரோஹித் ஷர்மா அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால் தனது 50 ரன்னைக்கூட அடிக்காமல், 40 பந்துகளில் 4 ஃபோர், 4 சிக்சர்களுடன் 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் விக்கட்டுப்பின்னால் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (33 ரன்), கே.எல். ராகுல் (27 ரன்) விராட் கோலிக்கு ஜோடியாக ஆடினர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஆட வந்தார். அவரும் துரதிர்ஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார்.

பின்னர் ஜதேஜா கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். கோலி தனது சதத்தைப் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 48ஆவது ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது.

          ஐந்து விக்கட்டுகள் எடுத்த முகம்மது ஷமி ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். தற்போது இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தேர்வாவது ஏறத்தாழ முடிவாகிவிட்டது எனச் சொல்லலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories