December 6, 2025, 1:09 PM
29 C
Chennai

WC 2023: வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!

world cup cricket 2023 - 2025
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
20ஆம் நாள் – தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
மும்பை – 24.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்க அணி (382/5, க்விண்டன் டி காக் 174, க்ளாசன் 90, ஐடென் மர்கரம் 60, டேவிட் மில்லர் 35, ஹசன் மகமது 2/67) வங்கதேச அணியை (46.4 ஓவரில் 233, மகமதுல்லா 111, கோட்சி 3/62, ஜேன்சன் 2/39, வில்லியம்ஸ் 2/56, ரபாடா 2/42) 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் பவுமா ஆடவில்லை. மர்க்ரம் அணித்தலைவராக இருந்தார். வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது க்விண்டன் டி காக் கீப்பிங் செய்யவில்லை. க்ளாசன் கீப்பராக இருந்தார்.

          பூவாதலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டர்கள் அதிரடியாக ஆடினார்கள். அணியின் மொத்த ஸ்கோரான 382இல் டி காக், க்ளாசன், மர்க்ரம், மில்லர் ஆகிய நான்கு பேர் மட்டும் மொத்தம் 354 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் விளாசித்தள்ளினர்.

இங்கிலாந்தோடு ஆடியபோது கடைசி 10 ஓவர்களில் 143 எடுத்த தென் ஆப்பிரிக்க அணி இன்று 144 ரன் எடுத்தது. டி காக் இன்று இந்த உலகக் கோப்பையின் மூன்றாவது சதத்தை அடித்தார். மர்க்ரம் 10 ரன்னில் தனது சதத்தைக் கோட்டைவிட்டார்.

முதல் 50 ரன்னை 70 பந்துகளில் அடித்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 50 ரன்னை 52 பந்துகளிலும், 150ஆவது ரன்னை அடுத்த 47 பந்துகளிலும், 200ஆவது ரன்னை அடுத்த 46 பந்துகளிலும், 250ஆவது ரன்னை அடுத்த 33 பந்துகளிலும் 300ஆவது ரன்னை அடுத்த 16 பந்துகளிலும் அடுத்த 38 பந்துகளில் 382 ரன்னும் அடித்தனர்.

          மிகக் கடினமான இலக்கை ஆடத் தொடங்கிய வங்கதேச அணி மிக மோசமாக விளையாடியது. ஏழாவது எட்டாவது ஓவர்களில் மூன்று விக்கட்டுகள் விழுந்தன. ரன்ரேட் மிகவும் குறைவாக இருந்தது. கடைசி வரை ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒருபுறம் மகமதுல்லா (111 பந்துகளில் 111 ரன், 4 சிக்சர், 11 ஃபோர்) நிலைத்து ஆடிக் கொண்டிருக்க மறுபுறம் வங்கதேச வீரர்கள் அட்டமிழந்துகொண்டே இருந்தனர்.

இறுதியில் 46.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோவியைத் தழுவியது.

          ஆட்ட நாயகனாக க்விண்டன் டி காக் அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் அதிகமான ரன்ரேட்டுடன் (2.370) இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.

நாளை ஆஸ்திரேலியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையே டெல்லியில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories