WC 2023: ஒற்றை மனிதராய் மேக்ஸ்வெல் Vs ஆப்கானிஸ்தான் ஆட்டம்!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
34ஆம் நாள் – ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
மும்பை – 07.11.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆப்கானிஸ்தான் அணியை (291, இப்ராஹிம் சத்ரன் 129*, ரஷீத் கான் 35*, ரஹ்மத் ஷா 30, ஷஹீதி 26, ஹேசல்வுட் 2/39) ஆஸ்திரேலிய அணி (46.5 ஓவர்களில் 293/7, கிளன் மேக்ஸ்வெல் 201*, நவீன் உல் ஹக் 2/40, ஒமர்ஜாய் 2/37, ரஷீத் கான் 2/40) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (21 ரன்) 8 ஓவர்கள் வரை விளையாடி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 129 ரன் அடித்தார். ரஹ்மத் ஷா (30 ரன்), ஷஹீதி (26 ரன்), ஒமர்ஜாய் (22 ரன்), நபி (12 ரன்), ரஷீத் கான் (ஆட்டமிழக்கமல் 35 ரன்) என சத்ரனுக்கு துணைநின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 291 ரன் அடித்தது.

          பதிலுக்கு ஆடவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கட்டுகள் தொடக்கம் முதல் மளமளவெனச் சரிந்தன. 18.3 ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 91 ரன் அடுத்து வெற்றிக்கு வாய்ப்பில்லை என்ற நிலைக்கு ஆஸ்திரேலிய அணி வந்தது. அதன் பின்னர் கிளன் மேக்ஸ்வெல் பேயாட்டம் ஆடினார்; 128 பந்துகளில் 201 ரன்; 10 சிக்சர், 21 ஃபோர். அவருடன் பேட் கம்மின்ஸ் (68 பந்துகளில் 12 ரன்) துணைநின்றார். மேக்ஸ்வெல் முதல் 51 பந்துகளில் 50 ரன் அடித்தார்; அடுத்த 25 பந்துகளில் சத்தத்தை நிறைவு செய்தார்; அடுத்த 28 பந்துகளில் 150 ரன்; அடுத்த 24 பந்துகளில் 200 ரன். மேக்ஸ்வெல் 27 ரன்னில் இருக்கும்போது எல்.பி. டபில்யூ கேட்கப்பட்டது; மேக்ஸ்வெல் ரிவ்யூ செய்தார்: மூன்றாவது அம்பயர் அவுட் இல்லை எனச் சொல்லிவிட்டார். இறுதியில் 46.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          12 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது. அரையிறுதிக்கு அந்த அணி தகுதிபெற்றுவிட்டது. இப்போது நாலாவது இடத்திற்கான அணி எது என்பது இனி முடிவாகும். நாளை புனேயில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளின் ஆட்டம் நடைபெறும்.

மீதமுள்ள ஆட்டங்கள்

  1. 09 நவம்பர் – நியூசிலாந்து vs இலங்கை;
  2. 10 நவம்பர் – ஆப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா;
  3. 11 நவம்பர் – இங்கிலாந்து vs பாகிஸ்தான்;
  4. 12 நவம்பர் – இந்தியா vs நெதர்லாந்து.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories