நான்கில் இரண்டை காங். இடமிருந்து தட்டிப் பறித்து, ஒன்றை தக்க வைக்கும் பாஜக.,!

BJP 2022 10 29 - 2026
#image_title

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப் படுகின்றன. இவற்றில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை நடைபெறும் நிலையில் இன்று மற்ற நான்கு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது.

இந்த நான்கு மாநிலங்களில், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸிடமிருந்து பாஜக., தட்டிப் பறிக்கிறது. மத்திய பிரதேசம் – ஒரு மாநிலத்தில் பாஜக., ஆட்சியை தக்க வைக்கிறது. தெலுங்கானாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஆளும் ராஷ்டிரிய சமிதியை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

தெலங்கானாவின் கம்மாரெட்டி தொகுதியில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் 3ஆவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் காங்கிரசின் ரேவந்த் ரெட்டியும், 2ஆவது இடத்தில் பாஜக வேட்பாளரும் உள்ளனர். தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை முதல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பாஜகவும்; 39 தொகுதிகளலில் காங்கிஸ் கட்சியும்; 1 தொகுதியில் மற்ற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.

மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் தொடக்கம் முதலில் பாஜக மிகப் பெரும் அளவில் முன்னிலை பெற்று வந்தது. “மக்கள் ஆசியுடன் ம.பி.யில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை உறுதி” என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் . கூறினார்

ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 100 இடங்களை தாண்டி பாஜக முன்னிலை பெற்றுள்ளது ஆளும் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

இதனிடையே, “இந்தியா கூட்டணி கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ம் தேதி டெல்லியில் நடைபெறும்” என்று, காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

காலை 11:30 மணி நிலவரப்படி…

மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 230/230 (பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்-116)

பாஜக – 162
காங்கிரஸ் – 65
பகுஜன் – 00
மற்றவை – 03

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 119/119 (பெரும்பான்மைக்கு-60)

காங்கிரஸ் – 65
பிஆர்எஸ் – 42
பாஜக – 09
மற்ற-03

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 199/199 (பெரும்பான்மைக்கு-101)

பாஜக-107
காங்-75
பகுஜன்-00
மற்ற-17

சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 90/90 (பெரும்பான்மைக்கு-46)

பாஜக-55
காங்-33
மற்ற-02

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories