பெட்ரோல், டீசல் விலை; ரூ.10 குறைக்க மத்திய அரசு ஆலோசனை!

petrol diesel price1 - 2026

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்கிறது. லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு மே 22ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85ல் இருந்து ரூ.102.63ஆக குறைக்கப்பட்டது. தில்லியில் ரூ.96.72, மும்பையில் ரூ.111.35 என குறைக்கப்பட்டது. பிறகு இன்று வரை பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை.

கடந்த 2022 மே 22ஆம் தேதி சென்னையில் டீசல் ரூ.94.24 ஆக குறைக்கப்பட்டது. தில்லியில் ரூ.89.62, கொல்கத்தாவில் ரூ.92.76 என இருந்தது. பிறகு இன்றுடன் 588வது நாளாக டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

புத்தாண்டுப் பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பு அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகமும், நிதியமைச்சகமும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தின. இதில் எவ்வளவு விலை குறைக்கலாம் என்பது குறித்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக மாதத்துக்கு இரண்டு முறை இந்த இரண்டு அமைச்சகங்களும் ஆலோசனை நடத்தி வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலர் முதல் 80 டாலருக்குள் உள்ளது. இதனால் விலை குறைப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, என்றனர்.

சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, மாத சராசரியாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் 109.34 டாலராக இருந்தது. பின்னர் மே மாதம் 122.84 டாலராக அதிகரித்தது. ஆனால், ஜூன் மாதத்தில் 110.1 டாலர்., எனவும், ஆகஸ்ட்டில் 96.49 டாலர், செப்டம்பரில் 87.96 டாலர் என தொடர்ந்து சரிவை சந்தித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் கூட மார்ச் மாதம் 79.77 டாலராக இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை, ஜூலை, செப்டம்பரில் 95.31 டாலராக உயர்ந்தது. இந்த மாத சராசரி ஸ்பாட் விலை 77.35 டாலராக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories