சீனாவைக் கண்டு பயப்பட வேண்டாம்; சீனாவைக் காட்டிலும் சிறப்பாகச் செய்ய அனுமதியுங்கள்: ஜெய்சங்கர்

jaishankar - 2026

சீனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். சீனா ஒரு பெரிய பொருளாதார நாடு. இந்தியாவில் இரண்டு பிரச்னைகள் நிலவுகிறது. கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றும் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்து வருகிறது. இதற்காக, வணிக பாதையில் இந்திய கடற்படை இன்று பத்து கப்பல்களை நிறுத்தி உள்ளது. கடினமான சூழ்நிலைகளில் கூட, நாம் உண்மையில் உதவ வேண்டும். நம் சுற்றுப்புறத்தில் மோசமான விஷயங்கள் நடந்தால் பொறுப்பான நாடாக கருதப்பட மாட்டோம். 
ஜெய்சங்கர் (பாரத வெளியுறவுத் துறை அமைச்சர்)


கடினமான சூழ்நிலையில் அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தினார். “இலங்கையின் நெருக்கடியில் உதவிய முதல் நாடு நாம்தான்” என்று அவர் கூறினார். சீனா என்ன செய்கிறது என்பதைப் பற்றிக் குறை கூறுவதை விட, “அதை விட சிறப்பாக செய்ய எனக்கு அனுமதியுங்கள்” என்பதே இந்தியாவின் பதில் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

மும்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மாணவர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.  அப்போது,  பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தனது உறவை வலுப்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வருவதை சுட்டிக்காட்டி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “இது இந்தியாவின் அண்டை நாடு மற்றும் வளங்களை வரிசைப்படுத்தி தெற்காசியாவின் புவிசார் அரசியல் சூழ்நிலையை சீனாவின் வழியில் வடிவமைக்கப் போகிறது,” என்றார். .

மேலும் அவர் பேசுகையில்…  “பெய்ஜிங்கிற்கு நாம் பயப்பட வேண்டாம். நாம் போட்டியை வரவேற்க வேண்டும், அவர்களை விட சிறந்தவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்,” என்று இந்திய மேலாண்மை நிறுவனம் மும்பையில் மாணவர்களுடன் செவ்வாயன்று நடைபெற்ற உரையாடலின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறினார். 

உலகின் முக்கிய பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று என்பதை ஒப்புக்கொண்ட ஜெய்சங்கர், பெய்ஜிங்கின் தந்திரோபாயங்களுக்கு புதுதில்லி பயப்படாமல், மற்ற தெற்காசிய நாடுகளுடன் தனது சிறந்த மற்றும் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று  கூறினார்.

கடினமான சூழ்நிலையில் அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தினார். “இலங்கையின் நெருக்கடியில் உதவிய முதல் நாடு நாங்கள்” என்று அவர் கூறினார். சீனா என்ன செய்கிறது என்பதைப் பற்றி குறை கூறுவதை விட, “அதை விட சிறப்பாக செய்ய எனக்கு அனுமதியுங்கள்” என்பதே இந்தியாவின் பதில் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். 

எழுத்தாளர் விஜய் சௌதைவாலே நடத்தும் ‘டாக்டர் எஸ் ஜெய்சங்கருடனான உரையாடல் நிகழ்ச்சியின் போது,  செங்கடல் நெருக்கடி மற்றும் இந்தியாவின் அண்டை நாட்டு கொள்கை என்பதில் இத்தகைய கருத்துகள் வெளிவந்தன. 

கிழக்கு-மேற்கு வர்த்தகத்திற்கான முக்கிய வழித்தடமான செங்கடல் பகுதியில், வர்த்தக / சரக்குக் கப்பல்கள் மீதான, யேமன் – ஹூதி பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் தொடர்ச்சியான இடையூறுகளை சந்தித்து வருகிறது. இது எரிபொருள் மற்றும் செலவுகளைக் கூட்டுகிறது. நீண்ட பயணங்கள் மற்றும் தளவாடத் துறையின் திறன்களை  சிரமப்படுத்துவதால், நஷ்டத்தை  பெருமளவு கொடுத்து  வருகிறது. 

இந்நிலையில், ஜெய்சங்கர், இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களை செங்கடல் பகுதியில் வணிகக் கடற்படைக் கப்பல்கள் மீதான தாக்குதலைச் சமாளிக்க போர்க்கப்பல் நிலைநிறுத்துவது பற்றிப் பேசினார்.

 “எங்களுக்கு இரட்டைப் பிரச்சனை இருப்பதால் அதைச் செய்தோம்; எங்களுக்கு கடற்கொள்ளையர் பிரச்சனை உள்ளது, மேலும் ஏவுகணை ட்ரோன் பிரச்சனை உள்ளது. கடந்த இரண்டு நாட்களில், இந்திய கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா, இரண்டு கப்பல்களில் இருந்து 36 பணியாளர்களை மீட்டது, அவர்களில் 19 பேர் பாகிஸ்தானியர்கள்.” என்றார் ஜெய்சங்கர். 

மேலும், ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களின் குறிப்புகளைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு ராஜதந்திரத்தை விளக்கினார் ஜெய்சங்கர். கோவிட் -19 இன் போது அண்டை நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு உதவியது என்பதற்கான உதாரணத்தை மேற்கோள் காட்டி, “இந்தியப் பெருங்கடலில் உள்ள பல நாடுகளுக்கு இராணுவ மருத்துவர்கள் உட்பட மருத்துவர்களை நாங்கள் அனுப்பினோம், அதனால்தான் நான் ராமாயணத்துடன் தொடர்பை ஏற்படுத்துகிறேன்” என்று கூறினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories