கர்நாடக தேர்தல் வருகிறது; கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஹிந்து யுவ சேனா பிரமுகர் கைது!

பெங்களுர்:

கர்நாடகாவில் தேர்தல் நெருங்குகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வருடம் தன் வீட்டின் முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் திடீரென ஹிந்து யுவ சேன பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ( வயது 55) கடந்த 2017 செப்டம்பரில் மர்ம நபர்களால் அவர் வீட்டின் முன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நக்சலைட்களுக்கு ஆதரவாளராக அறியப் பட்ட கௌரி லங்கேஷ் கொலையில் உடனடியாக துப்பு எதுவும் துலங்கவில்லை. இருப்பினும், அவர் ஹிந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டு, எழுதி வந்ததால், அவர் கொலையில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், நக்சல்களை தனது டிவிட்டர் பதிவில் அவர் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன வேறுபாட்டில் இக்கொலை நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் கௌரி லங்கேஷின் சகோதரர் கூறியிருந்தார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இப்படி ஒட்டு மொத்த குழப்பங்களை ஏற்படுத்தி வழக்கில் துப்பு எதுவும் துலங்காத நிலையில், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.18ஆம் தேதி மாண்டியாவின் மதூர் என்ற பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

gauri lankesh murder case - 2026

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதில், கைது செய்யப்பட்ட அந்த நபர் ஹிந்து யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த நவீன் குமார் (37) என்றும், அவருக்கு கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாகவும் விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

இதன் மூலம் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளவராகக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

தேர்தல் வரும் நேரத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது என சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories