கர்நாடக தேர்தல் வருகிறது; கௌரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் ஹிந்து யுவ சேனா பிரமுகர் கைது!

பெங்களுர்:

கர்நாடகாவில் தேர்தல் நெருங்குகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வருடம் தன் வீட்டின் முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் திடீரென ஹிந்து யுவ சேன பிரமுகர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ( வயது 55) கடந்த 2017 செப்டம்பரில் மர்ம நபர்களால் அவர் வீட்டின் முன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். நக்சலைட்களுக்கு ஆதரவாளராக அறியப் பட்ட கௌரி லங்கேஷ் கொலையில் உடனடியாக துப்பு எதுவும் துலங்கவில்லை. இருப்பினும், அவர் ஹிந்து அமைப்புகளுக்கு எதிராக செயல்பட்டு, எழுதி வந்ததால், அவர் கொலையில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், நக்சல்களை தனது டிவிட்டர் பதிவில் அவர் கண்டித்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன வேறுபாட்டில் இக்கொலை நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் கௌரி லங்கேஷின் சகோதரர் கூறியிருந்தார்.

இப்படி ஒட்டு மொத்த குழப்பங்களை ஏற்படுத்தி வழக்கில் துப்பு எதுவும் துலங்காத நிலையில், கர்நாடக சிறப்பு விசாரணைக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.18ஆம் தேதி மாண்டியாவின் மதூர் என்ற பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில் ஒருவர் சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

gauri lankesh murder case - 2026

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப் பட்டதில், கைது செய்யப்பட்ட அந்த நபர் ஹிந்து யுவ சேனா அமைப்பைச் சேர்ந்த நவீன் குமார் (37) என்றும், அவருக்கு கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாகவும் விசாரணைக் குழுவினர் தெரிவித்தனர்.

இதன் மூலம் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கௌரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளவராகக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

தேர்தல் வரும் நேரத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்திருப்பது அரசியல் உள் நோக்கம் கொண்டது என சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories