IPL 2024: பாராட்டுகள் பல பெற்ற தினேஷ் கார்த்திக்

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்தைந்தாம் நாள்

ஐபிஎல் 2024 – 15.04.2024 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சன்ரைசர்ஸ் அணி (287/7, ட்ராவிஸ் ஹெட் 102, கிளாசன் 67, அப்துல் சமத் 37, அபிஷேக் ஷர்மா 34, ஐடென் மர்க்ரம் 32, ஃபெர்கூசன் 2/52) பெங்களூரு அணியை (262/7, தினேஷ் கார்த்திக் 83, ட்யு பிளேசிஸ் 62, கோலி 42, அனுஜ் ராவத் 25*, பேட் கம்மின்ஸ் 3/43, மயக் மர்கண்டே 2/46) 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியில் இன்று முதல் ஐந்து வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர்.

அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (22 பந்தில் 34 ரன்), ட்ரவிஸ் ஹெட் (41 பந்துகளில் 102 ரன், 9 ஃபோர், 8 சிக்சர்), ஹென்றிச் கிளாசன் (31பந்துகளில் 67 ரன்), மர்க்ரம் (32 ரன்), அப்துல் சமது (37 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது.

288 ரன் என்ற கடினமான இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (20 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் டியுபிளேசிஸ் (28 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி விக்கட் இழப்பின்றி 76 ரன் எடுத்திருந்தது. இது சன்ரைசர்ஸ் அணி எடுத்திருந்ததை விட அதிகம்.

விராட் கோலி 7ஆவது ஓவரிலும், அடுத்த வீரர் வில் ஜேக்ஸ் அடுத்த ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதற்குடுத்து ஆட வந்த ரஜத் படிதர் (9 ரன்) மற்றும் சௌரவ் சௌஹான் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) இருவரும் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர்.  9.3ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆடவந்தார். அப்போது பெங்களூரு நிச்சயத் தோல்வி என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கார்த்திக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளில் 5 ஃபோர் மற்றும் 7 சிக்சர்களுடன் 83 ரன் அடித்து பெங்களூரு அணியின் வெற்றிக் கனவை உயிரோடு வைத்திருந்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய மஹிபால் லோமர் (11 பந்துகளில் 19 ரன்) மற்றும் அனுஜ் ராவத் (14 பந்துகளில் 25 ரன்) இருவரும் தினேஷ் கார்த்திக் அளவிற்கு ஆடாததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 262 ரன் கள் மட்டுமே எடுத்து தொல்வியைத் தழுவியது.  

சன்ரைசர்ஸ் அணியின் ட்ராவிஸ் ஹெட்  தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை கொல்கொத்தாவில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

15.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா54181.688
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி7254-1.185
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories