IPL 2024: ஜெய்ஸ்வால் அதிரடியில் தில் காட்டிய ராஜஸ்தான்

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

32ம் நாள்: ஐபிஎல் 2024 – 22.04.2024 

மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை அணியை (176/9, திலக் வர்மா 65, நெஹல் வதேரா 49, முகம்மது நபி 23, சந்தீப் ஷர்மா 5/18) ராஜஸ்தான் அணி (18.4 ஓவரில் 183/1, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 104*, ஜாஸ் பட்லர் 35, சஞ்சு சாம்சன் 38) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 6 ரன்) மற்றும் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் இரண்டாவது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஒரு மோசமான தொடக்கத்தைத் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் அதிரட் ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் (10 ரன்) 3.1ஆவது ஓவரில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி தந்தார். பவர் பிளே முடிவில் மும்பை அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 45 ரன் எடுத்திருந்தது. 

பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 72/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் திலக் வர்மா (45 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), முகம்மது நபி (17 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), நெஹல் வதேர (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி சற்று நல்ல நிலைக்கு வந்தது. ஆனால், ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (5 பந்துகளில் 3 ரன்), கோயட்சி (பூஜ்யம் ரன்), பியுஷ் சாவ்லா (1 ரன்), பும்ரா (1 ரன்) என மீதமுள்ள அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடாததால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. 

180 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான யஸஷ்வி ஜெய்ஸ்வால் (60 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் 18.1ஆவது ஓவர் வரை ஆடினார்.  மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 7.6ஆவது ஓவர் வரை ஆடி 35 ரன் சேர்த்தார்.  அதன் பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு 18.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுக்க உதவினார். இதனால் ராஜஸ்தான் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கொண்டது. 

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

22.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 871140.698
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
சென்னை74380.529
லக்னோ74380.123
குஜராத்8448-1.055
மும்பை8346-0.227
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories