IPL 2024: ருதுராஜ் அதிரடியில் மீண்டும் பட்டியலில் மேலேறிய சென்னை!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

39ம் நாள் :ஐபிஎல் 2024 – 28.04.2024

          இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றாது.

குஜராத் டைடன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

          குஜராத் அணியை (200/3, சாய் சுதர்ஷன் 84*, எம். ஷா ருக் கான் 58, டேவிட் மில்லர் 26*, ஷுப்மன் கில் 16) பெங்களூரு அணி (16 ஓவர்களில் 206/1, வில் ஜேக்ஸ் 100*, விராட் கோலி 70*, டியு பிளேசிஸ் 24) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே குஜராத் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான விருத்திமான் சாஹா (4 பந்துகளில் 5 ரன்) முதலாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (19 பந்துகளில் 16 ரன்) 6.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷா ருக் கான் (30 பந்துகளில் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), டேவிட் மில்லர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்திருந்தது.

          201 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி (44 பந்துகளில் 70 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும்  மற்றொரு தொடக்க வீரரான டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களம் இறங்கிய வில் ஜேக்ஸ் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 5 ஃபோர், 10 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடி பெங்களூரு அணிக்கு ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.

அந்த அணி 16 ஓவரிலேயே 1 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். குஜ்ராத் அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை பெங்களூரு அணி இன்று கையாண்டவிதம் பாராட்டிற்கு உரியது.

குஜராத் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று 11 ஓவர்கள் வீசினர் அதில் ரஷீத்கான் 51 ரன்கள் கொடுத்தார். நூர் அகமது 43 ரன்கள் கொடுத்தார். சாய் கிஷோர் 30 ரன்கள் கொடுத்தார். குஜராத் அணியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷா ருக் கான் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தும் வெற்றி கைநழுவிப் போனது.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

          சென்னை அணி (212/3, ருதுராஜ் கெய்க்வாட் 98, டேரில் மிட்சல் 52, ஷிவம் துபே 39*, அஜிங்க்யா ரஹானே 9, தோனி 5*) ஹைதராபாத் அணியை (199/3, ஐடன் மர்க்ரம் 32, கிளாசன் 20, நிதீஷ் குமார் ரெட்டி 15, அபிஷேக்ச் ஷர்மா 15, துஷார் தேஷ்பாண்டே 3/23, பதிரனா 2/17) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே (12 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.  

மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் (54 பந்துகளில் 98 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) 19.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய டேரில் மிட்சல் (32 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (20 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்திருந்தது.

          213 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (7 பந்துகளில் 13 ரன்) இரண்டாவது ஓவரிலும் அபிஷேக்ச் ஷர்மா (9 பந்துகளில் 15 ரன்,) மூன்றாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் ஆட்டமிழந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் (பூஜ்யம் ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மர்க்ரம் (32 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (15 ரன்), கிளாசன் (20 ரன்), அப்துல் சமது (19 ரன்), ஷப்பாஸ் அகமது (7 ரன்), பேட் கம்மின்ஸ் (5 ரன்), ஜெயதேவ் உனக்தத் (1 ரன்), புவனேஷ் குமார் (ஆட்டமிழக்காமல் 4 ரன்) என பேட்டர்கள் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்துகொண்டே இருந்தனர்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 134 ரன் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

          சென்னை அணியின் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

28.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்981160.694
கொல்கொத்தா853100.972
சென்னை954100.810
ஹைதராபாத்954100.075
லக்னோ954100.059
டெல்லி105510-0.276
குஜராத்10468-1.113
பஞ்சாப்9366-0.187
மும்பை9366-0.261
பெங்களூரு10376-0.415

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories