சிலைப் போர்: முகர்ஜி சிலையை சேதப் படுத்திய 7 பேரும் மாணவர்கள்!

Published:

சிலுவைப் போர்கள் குறித்து வரலாற்றுப் பாடங்களில் படித்த மாணவர்கள், சிலைப் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பது வருந்தத் தக்க செய்தி. கோல்கத்தாவில் பாஜக.,வின் முன்னோடிக் கட்சியான ஜன சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியின் சிலையை சேதப் படுத்தியதாக 6 பேர் கைது செய்யப் பட்டனர்.

திரிபுராவில் பாஜக., வெற்றி பெற்றதை அடுத்து, அங்கே லெனின் சிலை அப்புறப் படுத்தப் பட்டது. இதை அடுத்து சிலை அரசியல் பல இடங்களில் தொடங்கிவிட்டது. கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மேற்கு வங்கத்தின் கோல்கத்தாவில் ஜன சங்க நிறுவனர்களில் ஒருவரான ஷ்யாம பிரசாத் முகர்ஜியின் சிலை சேதப் படுத்தப் பட்டது. அது தொடர்பாக இப்போது 7 பேர் விசாரிக்கப் பட்டு வருகின்றனர். அவர்கள் ஜாதவ்புர் பல்கலைக் கழக மாணவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது நடப்பது சிலைப் போர் என்று கூறியுள்ளனர் அவர்கள். நாட்டின் இது போன்ற பதற்ற சூழலை உருவாக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளார். உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இதனிடையே, ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறை பதிலாகாது என்று கூறியுள்ளார் மாநில அமைச்சர் சொவந்தேப் சட்டோபாத்யாய. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலையை அரசு சீரமைக்கும் என்று கூறியுள்ளார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img