May 24, 2025, 9:47 AM
27.8 C
Chennai

Ind Vs Ban T20: தூள் கிளப்பிய பாண்ட்யா; இளம் இந்திய அணியின் வெற்றி!

ind vs ban t20
#image_title

இந்தியா-வங்கதேசம் முதல் டி20- குவாலியர்- 06.10.2024

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          வங்கதேச அணியை (19.5 ஓவர்களில் 127, மெஹிதிமிராஸ் 35, ஷண்டோ 27, அர்ஷதீப் சிங் 3/14, வருண் சக்ரவர்த்தி 3/31) இந்திய அணி (11.5ஓவர்களில் 132/3, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 39, சூர்யகுமார் யாதவ் 29, சஞ்சுசாம்சன் 29) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து 3போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது.

          மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்தியஅணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

          இந்திய அணியின் ஆடும் லெவனில், அபிஷேக் சர்மா,சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக்பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் நிதிஷ் ரெட்டி மற்றும்  மயங்க் யாதவ் இருவரும் இன்று முதன் முறையாக டி20ஆட்டத்தில் ஆடுகின்றனர்.

ALSO READ:  கெஞ்சிய பாகிஸ்தான்; தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு!!

          வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் பர்வேஸ்ஹொசைன் 8 ரன்னும், லிட்டன் தாஸ் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க சிறிது நேரம்தாக்குப் பிடித்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் 27 ரன்கள் எடுத்தார்.

          தவ்ஹித் ஹிருதாய் 12 ரன்களும், ரிசாத்ஹொசைன் 11 ரன்களும், தஸ்கின் அகமது 12 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியில்மெஹிதி ஹசன் மட்டும் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார்.

32பந்துகளை எதிர்கொண்ட அவர் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் எடுத்தது.

          இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி,அர்ஷ்தீப்சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜேக்கர் அலியை ஆட்டமிழக்கச்செய்த வருணின் பந்து ஒரு அற்புதமான பந்து. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றிஎன்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

          இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக்சர்மா 1 சிக்சர் 2 பவுண்டரியுடன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 15 ரன் எடுத்த அவர் கடைசி பந்தில் ஒரு துரதிர்ஷ்டவசமானரன் அவுட் ஆனார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5.3ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடிக்க நினைத்துஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே முறையில் சிக்சர் அடிக்க நினைத்துசஞ்சு சாம்சனும் 29 ரன்னுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

அதிரடியாக ரன்கள் குவித்தஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க,11.5 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

Topics

IPL 2025: பெங்களூர் அணிக்கு சவால் கொடுத்த இஷான் கிஷன்

பிளேஆஃப் சுற்றில் விளையாடப்போகும் அணிகள் எவை என்பது முடிவாகிவிட்டபோதும் எந்த அணி எந்த அணியோடு மோதப்போகிறது எ

கோயில் முன்னால செம ட்ராஃபிக்: சரி பண்ணுங்கப்பா!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடிால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி:

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முகூர்த்தக்கால் நடல்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை மண்டப முகூர்த்தக்கால் நடும் விழா

இது குழந்தைத் தனமானதா என்ன?

*எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது? ராகுல் காந்தியின் பாப்பா கேள்வி*        *--...

திமுக.,வின் அநாகரிக பேச்சு, ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்!

திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம்...

வால்மீகி ராமாயணத்தில் உத்தர காண்டம் உள்ளதா?!

உத்தர காண்டத்தோடுதான் ராமாயணம் முழுமையடைகிறது. ராமாயணம் ஏழு காண்டங்களால் ஆனதென்று வால்மீகி தெளிவாகக் கூறியுள்ளார்.

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

பஞ்சாங்கம் மே 23 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories