திரிபுரா முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்பு: அத்வானி, மோடி பங்கேற்பு

திரிபுரா முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப் வெள்ளிக்கிழமை இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த கால் நூற்றாண்டாக திரிபுரா மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த இடதுசாரிகளை வெளியேற்றி, பாஜக., முதன்முதலாக வெற்றி பெற்று, திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டார்.

48 வயதாகும் பிப்லப் குமார் தேப், திரிபுராவின் கொமோடி நகரைச் சேர்ந்தவர். பிஏ., பட்டம் பெற்றுள்ள பிப்லப், திரிபுரா மாநில பாஜக., தலைவராக 2016 ஜனவரியில் பொறுப்பேற்றார். மிகச் சிறிய வயதில், கட்சியின் சார்பில் மாநிலத் தலைவரான பெருமையைப் பெற்றார். வேறு எந்த மாநிலத்திலும், பாஜக.,வின் மாநிலத் தலைவர்கள் இவ்வளவு சிறு வயதில் பொறுப்பேற்றுக் கொண்டதில்லையாம். தலைமைப் பொறுப்பில் வந்ததும், உடனே ஐபிஎஃப்டி.,யுடன் கூட்டணியைப் பேசி முடித்தார். தொடர்ந்து, பாஜக., சார்பில் அகர்தலாவில் இருந்து 2018 தேர்தலில் வென்று இப்போது மாநிலத்தில் 10ஆவது முதல்வர் ஆகியிருக்கிறார்.

அகர்தலாவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜிஸ்ணு தேப் பர்மன் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ram madhav manik - 2026

இந்தப் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதற்குக் காரணமாக, அண்மையில் நடைபெற்ற வன்முறைகளைக் குறிப்பிட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் அழைத்ததின் பேரில், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories