April 27, 2025, 12:07 AM
30.2 C
Chennai

மகா சிவராத்திரி; இன்று நிறைவு பெறும் மகா கும்பமேளா! 63 கோடி பேருக்கு மேல் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மகர சங்கராந்தியான  ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்று, மகா சிவராத்திரியான பிப்.26 இன்று நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.

உ.பி. மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகா கும்பமேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகர சங்கராந்தியான கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்திருந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுவரை 63 கோடி பேருக்கும் மேல் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் நிறைவுபெறுவதையொட்டி, நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.  

நிறைவு நாளை முன்னிட்டு நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி செல்லத் தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில்,முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதே நேரம், அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

முன்னதாக, கும்பமேளாவில் நதி நீர் குளிக்கக் கூட லாயக்கில்லாத வகையில் அசுத்தம் அடைந்ததாக எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதில் அளித்தார். அப்போது அவர், கழுகுகள் அங்கே பிணங்களை பார்த்தன, பன்றிகள் அழுக்கை பார்த்தன, நம்பிக்கை கொண்டோர் ஒழுங்கைப் பார்த்தார்கள், பக்தர்கள் அங்கே கடவுளைப் பார்த்தார்கள் என்று கூறினார்.

ALSO READ:  உங்கள் குடும்பத்துக்கு ஒரு கொள்கை; ஏழைகளுக்கு ஒரு கொள்கையா? சம கல்வி நம் உரிமை!

சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா அல்லது மகா கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொளிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories