உ.பி., பீகாரில் இன்று இடைத்தேர்தல்! வருங்கால கூட்டணியை முடிவு செய்யும்?!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

modi nithish - 2026

புது தில்லி:

உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹாரில்  மூன்று மக்களவை மற்றும் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இன்று நடக்கின்றன. இந்தத் தேர்தல்கள் மூலம் மாநிலத்தில் மாறிய  கூட்டணிக்கு மக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பது தெளிவாகும்.

உ.பி.யில் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மௌரியா ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றனர். எனவே இந்த இரு தொகுதிகளும் காலியாகின. இதை அடுத்து இந்த இரு மக்களவைத் தொகுதிகளுக்கும்  பீஹாரில் அரேரியா மக்களவைத் தொகுதிக்கும் என மூன்று மக்களவைத்  தொகுதிகளுக்கும்  இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

அடுத்து, பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் முதல்வர் நிதீஷின் கௌரவத்துக்கு  சவால் விடும்படியாக உள்ளது. காரணம், பீகாரில் ஆட்சியில் இருந்த நிதிஷ், ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியை முறித்துவிட்டு ஒரே நாள் இரவில் பாஜக.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்தக் கூட்டணியை மக்கள் ரசித்து விரும்பி ஏற்றுக் கொண்டார்களா என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டிக் கொடுத்துவிடும் என்று கூறுகிறார்கள் அரசியல் மட்டத்தில். எனவே இந்த மூன்று மக்களவை, இரு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img