February 22, 2026, 7:17 AM
25.4 C
Chennai

வங்கி ஏய்ப்பில் அடுத்த அதிர்ச்சி! 8 வங்கிகளில் ரூ.1394 கோடி!

union bank india ubi ubi - 2026வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி ஏய்ப்பு முறைகேடுகள் தொடர்பான தகவல்களில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக வந்த தகவல். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதால், இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வங்கி அதிகாரிகள் உதவியுடன் நிதி மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிறுவனமான டோடெம் இன்ப்ரா லிட்., (Totem Infrastructure Limited). இந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, டொடெம் இன்ஃப்ரா லிட்., நிறுவனத்தின் உரிமையாளர் சலாலீத், கவிதா ஆகியோர் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, தங்கள் வங்கியில் ரூ.304 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரை அடுத்து சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிறுவனம், சாலைகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை மேற்கொள்வது, கட்டுமானங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளைக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனை அடைக்காமல் ஏய்த்து வந்தது. அதற்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி, பணத்தை வேறு வழிகளில் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வட்டி, கடன் ஆகியவற்றைச் செலுத்தாததால், கடந்த 2012 ஜூன் 30ல் வராக்கடனாக வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories