வங்கி ஏய்ப்பில் அடுத்த அதிர்ச்சி! 8 வங்கிகளில் ரூ.1394 கோடி!

union bank india ubi ubi - 2026வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் வங்கி ஏய்ப்பு முறைகேடுகள் தொடர்பான தகவல்களில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி உட்பட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக வந்த தகவல். இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதால், இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

வங்கி அதிகாரிகள் உதவியுடன் நிதி மோசடி செய்யும் நிறுவனங்களின் வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஹைதராபாத்தைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிறுவனமான டோடெம் இன்ப்ரா லிட்., (Totem Infrastructure Limited). இந்த நிறுவனம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, டொடெம் இன்ஃப்ரா லிட்., நிறுவனத்தின் உரிமையாளர் சலாலீத், கவிதா ஆகியோர் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, தங்கள் வங்கியில் ரூ.304 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக அளித்த புகாரை அடுத்து சிபிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இந்த நிறுவனம், சாலைகள் அமைப்பது, குடிநீர் திட்டங்களை மேற்கொள்வது, கட்டுமானங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இந்தப் பணிகளைக் காட்டி வங்கிகளில் கடன் பெற்று, வாங்கிய கடனை அடைக்காமல் ஏய்த்து வந்தது. அதற்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்கு காட்டி, பணத்தை வேறு வழிகளில் திருப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வட்டி, கடன் ஆகியவற்றைச் செலுத்தாததால், கடந்த 2012 ஜூன் 30ல் வராக்கடனாக வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய சிபிஐ., இந்நிறுவனம் 8 வங்கிகளில் ரூ.1,394 கோடி மோசடி செய்திருப்பதை வெளிப்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

Topics

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories