வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published:

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 148 புலிகள் இருந்ததாகவும், 2014ல் அது 201 ஆக அதிகரித்துள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில்தான் அதிகபட்சமாக 167 புலிகளும், அருணாசலப் பிரதேசத்தில் 28 புலிகளும் உள்ளன. அஸ்ஸாமில் உள்ள காஸிரங்கா தேசிய புலிகள் காப்பகத்தில் 125 புலிகளும் அருணாச்சலில் உள்ள நம்தாபா தேசிய காப்பகத்தில் 4 புலிகளும் உள்ளன என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img