நாட்டில் பல்துறையில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படும் பத்ம விருதுகள் குறித்து இன்று காலை வெளியான தகவல் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: 2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த விருதுகள் குறித்த அறிவிப்பு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும். இந்த விருதுகள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக சிலரது பெயர்கள் ஊடகங்களில் வெளியானது ஊகங்களில் அடிப்படையில் வெளியான தவறான தகவல். அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப் படாதவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.

