மியாமியில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகியாக கொலம்பியாவைச் சேர்ந்த அழகி வெற்றி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து யாரும் வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பதாகவும், அடுத்த வருடம் தாம் போட்டிக்குப் போவதாகவும் கூறியுள்ளார் இந்தியாவின் ராக்கி சாவந்த். இது குறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராக்கி சாவந்த் கூறியபோது… எனது நாட்டுக்காக நான் எதுவும் செய்வேன். இந்தியாவைச் சேர்ந்த யாருமே வெற்றி பெறவில்லை என்பது கவலையாக உள்ளது. உலக அளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் அவ்வளவு அழகான யாருமே இல்லையா என்ன? என்று கூறியுள்ளார். இந்நிலையில், ராக்கி சாவந்த் போட்டியில் கலந்து கொண்டால் நானும் ஏன் கலந்து கொள்ளக் கூடாது, எனக்கு ராக்கி சாவந்தை விட டிவிட்டரில் அதிக பின்தொடர்பவர்கள் உள்ளனர். நான் மிஸ் யுனிவர்சாக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பூனம் பாண்டே. ராக்கி சாவந்த் தனது டிவிட்டில் இது பற்றி தனது ரசிகர்களுக்கு எழுதியுள்ள செய்தியில், “நான் நிச்சயம் வெல்வேன்; காரணம்ஜீஸஸ் என்னை விரும்புகிறார்” என்று கூறியுள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
அடுத்த ‘பிரபஞ்ச அழகி’ – ராக்கி சாவந்த் ?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari