காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்; கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கைது!

Published:

congress - 2026

தமிழகத்தில் நடைபெறும் காவிரி ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் திமுக.,வுடன் கூட்டணிக் கட்சியினர் என்ற வகையில் காங்கிரஸாரும் கலந்து கொண்டு வந்தனர். இந்நிலையில், இன்று மத்திய அரசுக்கு எதிராக, நாடு முழுதும் நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸாரும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளச் சென்றனர்.

சென்னை அடையாறில் இருந்து சேப்பாக்கம் நோக்கி தடையை மீறி பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப் பட்டனர். கராத்தே தியாகராஜன் தலைமையில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருக்க பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை சரியாக நடக்கவிடாமல் செய்ததற்காகவும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாடு முழுதும் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இன்று தில்லி ராஜ்கட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img