அணி வீரர்களுக்கு ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் வெறிப் பேச்சு!

Published:

velmurugan - 2026

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் வெளியில் செல்லும் போது ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று வெறித்தனமாக வன்முறையைத் தூண்டிப் பேசியுள்ளார் பண்ருட்டி வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை சீர்குலைக்கவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.

மேலும், ஐபிஎல் போட்டியை நிறுத்த ஸ்டேடியத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறிய வேல்முருகன் சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்று வன்முறையைத் தூண்டிவிட்டபடி பேசினார்.

நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால் ரசிகர்கள்போல் சென்று தொண்டர்கள் எதிர்ப்பர் என்று எச்சரிக்கை விடுத்த அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஊழல்களை வெளிப்படுத்த நேரிடும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஐபிஎல்., போட்டிகள் குறித்த அரசியல் தமிழகத்தில் நிலவுவது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img