எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!

Published:

suresh raina - 2026

திருநெல்வேலி: ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தமிழர்கள் ஒருவர்கூட இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு மிரட்டல் விடுக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.

இந்நிலையில், திருநெல்வேலியில் வடக்கன்குளம் தனியார் கல்லூரியில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டுள்ளது. காவிரி பிரச்னைக்காகப் போராடுபவர்களால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்கவே இந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img