ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

aseemanand - 2026

ஹைதராபாத் : ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நமாபல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2007ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சுவாமி அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ். முன்னாள் பிரசாரகர்கள் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமசந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சௌஹான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் சுனில் ஜோஷி வழக்கு விசாரணையில் இருந்தபோதே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா இருவரும் தலைமறைவாயினர். தேஜ்ராம் பார்மர், அமித் சௌஹான் ஆகியோரின் தொடர்பு குறித்த விசாரணை முற்றுப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பில் 226 சாட்சியங்கள் விசாரிக்கப் பட்டுள்ளன. 411 கோப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.

இவர்களில் சுவாமி அசீமானந்தா, மோகன்லால் ரதேஸ்வர் இருவரும் பிணையில் வெளியில் வந்துவிட்டனர். மற்ற மூவரும் ஹைதராபாத் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பில், இவர்களுக்கும் இந்த வழக்கின் தொடர்புக்கும் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories