நரோடா பாடியா படுகொலை வழக்கு: குஜராத் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை

gujratriot - 2026

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, 97 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், 28 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்டார்.

2002ம் வருட குஜராத் கலவரத்தின்போது ஆமதாபாத் புறநகர்ப் பகுதியான நரோடா பாட்டியாவில் 35 குழந்தைகள் 36 பெண்கள் உட்பட 97 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சற் மாயாபென் கோட்னானி, பஜ்ரங் தள, அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என 2012 ஆகஸ்ட்டில் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

அப்போது, கலவர கும்பலை வழிநடத்தியதாக மாயாபென் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனையும், கொடூரமான முறையில் கலவரத்தை அரங்கேற்றியதாக பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மாயாபென் கோட்னானி உள்ளிட்ட 16 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட தீர்ப்பை, 21 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று காலத்தைக் குறைத்து உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories