December 5, 2025, 9:15 PM
26.6 C
Chennai

நரோடா பாடியா படுகொலை வழக்கு: குஜராத் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை

gujratriot - 2025

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, 97 பேர் எரித்துக் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், 28 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்டார்.

2002ம் வருட குஜராத் கலவரத்தின்போது ஆமதாபாத் புறநகர்ப் பகுதியான நரோடா பாட்டியாவில் 35 குழந்தைகள் 36 பெண்கள் உட்பட 97 பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சற் மாயாபென் கோட்னானி, பஜ்ரங் தள, அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என 2012 ஆகஸ்ட்டில் விசாரணை நீதிமன்றம் அறிவித்தது.

அப்போது, கலவர கும்பலை வழிநடத்தியதாக மாயாபென் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைத் தண்டனையும், கொடூரமான முறையில் கலவரத்தை அரங்கேற்றியதாக பாபு பஜ்ரங்கிக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மாயாபென் கோட்னானி உள்ளிட்ட 16 பேரை வழக்கில் இருந்து விடுவித்தது. பாபு பஜ்ரங்கிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட தீர்ப்பை, 21 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்று காலத்தைக் குறைத்து உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories